அற்றைக்கு இரை தேடி
இந்த திருப்புகழில் இருக்கும் வேதாந்த கருத்துக்களை இந்த பதிவில் காணலாம். அறம், பொருள், இன்பம், வீடு ( தர்மம் அர்த்தம் காமம் மோட்சம்) இவை நான்குமே புருஷார்த்தம் எனப்படும். இவற்றில் அறத்துடன் பொருளை ஈட்டி , இன்பத்தை நுகரும் மனிதன், ஒரு காலகட்டத்தில் இது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோள் இல்லை. இதற்கு மேல் ஏதோ ஒன்று உள்ளது என்று உணரும் போது அவன் வீடு பேறு அல்லது மோட்சத்திற்கு தயாராகிறான்.